Home கலை உலகம் ஒரு நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது – நஸ்ரியா!

ஒரு நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது – நஸ்ரியா!

610
0
SHARE
Ad

nazriya1சென்னை, மார்ச் 17 – சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது வளர்ச்சியை அவரே தடுத்து விட்டனர். அதனால் அதன்பிறகு நஸ்ரியாவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர்.

இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் மட்டும் தமிழ், மலையாளத்தில் தான் இயக்கியுள்ள ‘வாய் மூடி பேசவும்’ படத்துக்கு தைரியமாக அவரை நடிக்க வைத்து படத்தையும் முடித்து விட்டார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக்கும்.

யாரையும் பாரபட்சம் பார்க்காமல் அனைவருடனும் சகஜமாக பேசிக்கொண்டேயிருப்பார். அந்தவகையில் ஒரு நிமிடம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசாமல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்றார் இயக்குனர் பாலாஜி மோகன்.

#TamilSchoolmychoice

அதையடுத்து நஸ்ரியா பேசும்போது, நான் எப்போதுமே நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கு முதலிடம் கொடுப்பேன். அந்தவகையில் இந்த படத்தில் என் நடிப்பிற்கு நல்ல வேடம் கிடைத்தது. அதனால் இதற்கு முன்பு தமிழில் நான் நடித்து வெளியான நேரம், ராஜாராணி படங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

நான் படப்பிடிப்பில் எப்போதும் பேசிக்கொண்டேயிருந்ததாக சொன்னார்கள். அது நிஜம்தான். என்னால் வாயை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் கூட இருக்கவே முடியாது. எப்போதும் கலகலப்பாக இருக்கவே ஆசைப்படுவேன். அதோடு என்னை சுற்றியிருப்பவர்கள் பேசாமல் இருந்தாலும் அவர்களையும் என்னைப்போன்றே கலகலப்பாக மாற்றி விடுவேன் என்கிறார் நஸ்ரியா.