அங்கு பணியாற்றிவரும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற ஊழியர்கள் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தூதரக செயல்பாடுகளும் வரும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதியுடன் நிறுத்திக்கொள்ளப்போவதாக அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சிரியா மக்களுக்கு நிகழும் கொடுமைகளுக்குக் காரணம் தற்போதைய அரசுதான், அவர்களால் நியமிக்கப்பட்ட நபர்கள் தூதரக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்க அரசால் ஏற்க இயலாது என்று, சிரியாவிற்கான அமெரிக்கச் சிறப்புத் தூதர் டேனியல் ரூபின்ஸ்டென் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.