இதற்கு முன்னதாக, “ஆல்ரைட் குட்நைட்” தான் கடைசி வார்த்தைகள் என்று கூறப்பட்ட தகவலில் உண்மை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்து கடைசியாகக் கிடைத்த இந்த வார்த்தைகளை கூறியது தலைமை விமானியா அல்லது துணை விமானியா என்பது குறித்து தடயவியல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் உறவினர்களுக்கு விளக்கமளிக்க, அதன் முழு விபரங்களையும் வெளியிடுமாறு விசாரணை அதிகாரிகளை அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.
Comments