Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தல் – 2-ஆம் கட்டமாக 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

நாடாளுமன்றத் தேர்தல் – 2-ஆம் கட்டமாக 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

437
0
SHARE
Ad

assam-electionஅருணாச்சலப் பிரதேஷ், ஏப்ரல் 9 – வடகிழக்கு மாநிலங்களின் 6 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணிப்பூரில் ஒரு தொகுதியிலும், மேகாலயாவில் இரண்டு தொகுதிகளிலும் நாகாலாந்து மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கென ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.மேலும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கிடையே நாளை நடைபெறவுள்ள 91 தொகுதிகளுக்கான 3-வது கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.