Home வாழ் நலம் மூச்சுத் திணறலைப் போக்கும் வெற்றிலை!

மூச்சுத் திணறலைப் போக்கும் வெற்றிலை!

981
0
SHARE
Ad

ilaiஏப்ரல் 23 – வெற்றிலை பொதுவாக சீதத்தை நீக்கும் சக்தி கொண்டது. வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க  வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் தேய்த்தால் மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு நீங்கும். குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலுக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேனுடன் கொடுக்க குணமாகும்.

#TamilSchoolmychoice

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும்.

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் தடவினால் சளி குறையும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
வெற்றிலையை அரைத்து வாத வலிகளுக்கும், கற்பபையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு நல்ல பலன் தரும்.vetrilai

வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சளி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி உடலில் உள்ள கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் குணமாகும். சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி, காது வலி குணமாகும். விடாது சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.