மொத்தம் உள்ள 328 தொகுதிகளில் சுமார் 9 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், 2 கோடி மக்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றிருந்தனர். எட்டாயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிக்கி மூன்றாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள், இரண்டு வாக்குச் சாவடிகளை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் கைப்பற்றியது என பல அச்சுறுத்தல்களுக்கிடையில் நேற்று தேர்தல் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், தற்போதையை ஆளும்கட்சி உள்பட யாரும் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்று முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது கடினம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் தைரியமாக வாக்களித்த ஈராக் மக்களை, அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஜான் கெர்ரி பாராட்டியுள்ளார்.