Home உலகம் பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து – அமெரிக்கா

பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து – அமெரிக்கா

805
0
SHARE
Ad

us-flagவாஷிங்டன், மே 2 –  பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத கும்பலால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக 2013-ஆம் ஆண்டு அமெரிக்கா எச்சரிக்கை அறிக்கை ஒன்றை இந்தியாவிற்கு அனுப்பி இருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சர்வதேச குழுவுடன் இணைந்து பயங்கரவாதத்தை ஒடுக்கும் என இந்தியா பதிலளித்திருந்தது. தற்போது மீண்டும் அமெரிக்கா, இந்தியாவை எச்சரித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.