இதுகுறித்து வியட்நாம் அதிகாரிகள் கூறுகையில், “சீனா, உள்நோக்கத்துடன் வியட்நாம் கப்பல் மீது தங்கள் நாட்டு கப்பல்களை மோதி பிரச்னையை பெரிதாக்குகிறது” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 சீன மீனவர்களை பிலிப்பைன்ஸ் கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சீனா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.இதனால் வியட்நாம், பிலிப்பைன்ஸ், சீனா நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ரோந்து பணியில் ஈடுபட்ட வியட்நாம் கப்பலுடன், சீனக் கப்பல் நேருக்குநேர் மோதல்!
Comments