Home இந்தியா இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம்! முதலாவது முதல்வர் பதவியேற்றார் சந்திரசேகர ராவ்!

இந்தியாவின் 29-ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம்! முதலாவது முதல்வர் பதவியேற்றார் சந்திரசேகர ராவ்!

674
0
SHARE
Ad

santhiuஐதராபாத், ஜூன் 2 – இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் இன்று ஜூன் 2-ஆம் தேதி உருவானது. இதனையடுத்து ஐதராபாத் நகரில் பொது மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகர ராவ் இன்று பொறுப்பேற்றார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திராவின் தெலுங்கானா மாநில முதல் அமைச்சராக சந்திரசேகர ராவ் இன்று திங்கட்கிழமை காலை 8.15 மணிக்கு ஐதராபாத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.

இந்திய திருநாட்டின் 29-ஆவது மாநிலத்தின் முதல் அமைச்சராக அவர் பதவியேற்றார். மேலும் இம்மாநிலத்தில் முதலாவது முதல் அமைச்சராக ராவ் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது ஆந்திர ஆளுநராக உள்ள நரசிம்மன் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றுக்கொள்வார். மேலும் அங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அதிபர் ஆட்சி திரும்ப பெறப்படும்.

santhira shagarr ravதனது பதவியேற்பு விழாவிற்கு தேசிய அளவில் எந்த விருந்தினர்களையும் அழைக்கவில்லை என ராவ் தெரிவித்துள்ளார்.  அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 63 தொகுதிகளை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா அல்லாத ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் அரசு ஒரு வாரத்துக்கு பின்பே பதவியேற்கவுள்ளது.