Home கலை உலகம் சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதிஹாசன்!

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதிஹாசன்!

783
0
SHARE
Ad

shruti-haasanசென்னை, ஜூன் 4 – சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதிஹாசன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார். இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்.

#TamilSchoolmychoice

மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடிபுகுந்துவிட்டார்.

இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம். இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதிஹாசன்.