Home உலகம் ஊழல் குற்றச்சாட்டு: பிரான்ஸின் முன்னாள் அதிபர் சர்கோசியிடம் விசாரணை தொடங்கியது!

ஊழல் குற்றச்சாட்டு: பிரான்ஸின் முன்னாள் அதிபர் சர்கோசியிடம் விசாரணை தொடங்கியது!

425
0
SHARE
Ad

nicolas-sarkozyபாரிஸ், ஜூலை 2 – பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி, மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அவரை அழைத்துச் சென்றனர்.

சர்கோசி தனது பதவி காலத்தில் லிபியாவின் முயம்மர் கடாபியிடமிருந்து சட்ட விரோதமாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரச்சார நிதியாக வாங்கினார் என குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஊழல் பிரிவு அதிகாரிகள் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

Nicolas Isarkosiஇதன் முதல் கட்டமாக நேற்று விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மீது 24 மணி நேரம் விசாரணையை அதிகாரிகள் நடத்தினர். மேலும், தேவைப்பட்டால் கால நீட்டிப்பு செய்து கொள்வதற்கான வரம்புகளை ஆளும் அரசு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வரும் 2017-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற உள்ள அடுத்த அதிபருக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த சர்கோசியின் நம்பிக்கையை இந்த ஊழல் வழக்கு தகர்த்துள்ளது.