Home உலகம் உலகக் கிண்ணக் காற்பந்து : பிரான்ஸ் 2-0 கோல்களில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை...

உலகக் கிண்ணக் காற்பந்து : பிரான்ஸ் 2-0 கோல்களில் மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை சந்திக்கிறது

484
0
SHARE
Ad

டோஹா : உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 14) நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மொரோக்கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.

இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது. அர்ஜெண்டினா 3-0 கோல் எண்ணிக்கையில் குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் நுழைந்திருக்கிறது.

காற்பந்து  விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் கனவோடு இருந்து வருகிறார் அர்ஜெண்டினா காற்பந்து குழுவின் முன்னணி விளையாட்டாளரும், குழுத் தலைவருமான லியோனல் மெஸ்ஸி. அந்தக் கனவை நோக்கி நகரும் விதத்தில் 3-0 கோல் எண்ணிக்கையில் குரோஷியாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா நுழைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டியில் குரோஷியாவும், மொரோக்கோவும் மோதவிருக்கின்றன.