Home உலகம் ரஷ்ய விமானிகளின் சாதுரியத்தால் பெரும் விமான விபத்து தவிர்ப்பு! (காணொளியுடன்)

ரஷ்ய விமானிகளின் சாதுரியத்தால் பெரும் விமான விபத்து தவிர்ப்பு! (காணொளியுடன்)

483
0
SHARE
Ad

articleரஷ்யா, ஜூலை 8 – கடந்த சனிகிழமை ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, யூடீஏர் விமான நிறுவனத்தின் போயிங் 767-300 ரக விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பரட் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது.

அப்போது, எதிர்பாரத விதமாக ஏய்ரோலினா அர்ஜெண்டினா நிறுவனத்தின் ஏல்ர்பஸ் ஏ 340-300 ரக விமானம் ஒன்று ஒடுபாதை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதை ரஷ்ய போயிங் 767-300 ரக விமானிகள் கண்டுகொண்டனர்.

இருப்பினும், ரஷ்யா விமானிகள் விமானத்தை தரையிறக்க முயற்சிக்கையில், மேலும் அதிர்ச்சியாக ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் ஏர்பஸ் விமானம் ஒடுபாதையை வேகமாக கடக்க முயற்சித்தது.

#TamilSchoolmychoice

அதை கண நேரத்தில் உணர்ந்த ரஷ்யா விமானிகள், சமயோஜிதமாக தங்கள் போயிங் விமானத்தை மேல் எழ செய்தனர். சற்று தாமதித்திருந்தால் இரண்டு விமானங்களும் மோதியிருக்கும். பின்னர் ரஷ்ய விமானம் 2-ஆம் ஒடுபாதையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

அதன் பின்னர் ஏய்ரோலினா அர்ஜெண்டினாவின் விமானமும் பறந்து சென்றது. ரஷ்ய விமானிகளின் சமயோஜித நடவடிக்கையால் பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டது.