இந்த நிகழ்ச்சியினை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வைரமுத்துவின் இலக்கிய இரசிகர்களும், நெருங்கிய நண்பர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.
வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில பிரபலமான பிரமுகர்கள் கலந்து கொண்டு வைரமுத்துவின் இலக்கியப் பணி குறித்து பாராட்டுரை வழங்குகின்றார்கள்.
மலேசியா சார்பாக விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கவிருக்கின்றார்.
சரவணன் மலேசியாவில் கண்ணதாசன் அறவாரியத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் கண்ணதாசன் பிறந்த நாளை கலை, இலக்கிய விழாவாகக் கொண்டாடுவதோடு, அந்த இயக்கத்தின் சார்பில் வேறுபல இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வந்துள்ளார்.
வைரமுத்துவின் மணி விழா குறித்து செல்லியல் தகவல் ஊடகம் தொடர்பு கொண்ட போது, அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதை சரவணன் உறுதிப்படுத்தினார்.