அவரைச் சந்தித்தப் புகைப்படத்தை தன் முகநூலில் பதிவிட்ட அவர் பின்வருமை மூதுரை வரிகளையும் பதிவிட்டார்:
நற்றா மரைக்கயத்தில் நல்அன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடைபெறும் 17ஆவது வெளிநாடுவாழ் இந்தியர்தின மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. ஜனவரி 10-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாடு என்பது இந்திய அரசாங்கம் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான முக்கிய தளமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளான 9 ஜனவரி 2015-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் இந்த வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.