Home உலகம் தனி நாடு கோரும் எண்ணமில்லை – இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை!

தனி நாடு கோரும் எண்ணமில்லை – இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கை!

505
0
SHARE
Ad

kilinochie_sridharan_002கொழும்பு, ஜூலை 17 – இலங்கையில் தனி நாடு கோரி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, தற்போது அதன் பிடியை தளர்த்தி உள்ளது.  கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனி நாடு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது.

இதனை கடுமையாக எதிர்த்த ஆறு பிரதான சிங்களக் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை நாட்டை துண்டாடும் செயல் என்று குற்றம்சாட்டின. மேலும் இதற்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தன.

இந்த ஆறு மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரித்து வந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விளக்கம் கேட்டது.

#TamilSchoolmychoice

தற்போது இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்து உள்ள அந்த அமைப்பு, “இலங்கையின் ஒற்றையாட்சி முறை ஏற்றுக்கொள்கிறோம். தனி நாடு கோரும் எண்ணம் தற்போது எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதய நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.