Home நாடு எம்எச்17 பேரிடர்: விசாரணைக் குழுவிற்கு மலேசியா 3 நிபந்தனைகள் விதித்தது!

எம்எச்17 பேரிடர்: விசாரணைக் குழுவிற்கு மலேசியா 3 நிபந்தனைகள் விதித்தது!

484
0
SHARE
Ad

Malaysian Prime Minister Najib Razak at the 20th International Conference on The Future of Asiaகோலாலம்பூர், ஜூலை 19 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் எம்எச்17 குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம் ஒன்றை பிரதமர் நஜிப் துன் ரசாக் ஏற்பாடு செய்தார்.

அக்கூட்டத்தில், விமான பேரிடர் சம்பவத்திற்கு துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு தேசிய கொடியை வரும் திங்கட்கிழமை வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவிட்டார்.

கிளர்ச்சியாளர்களின் இந்த மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற, வன்முறையான பாதக செயலுக்கு நஜிப் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று முழுமையான விசாரணை முடியும் வரை யார் மீது குற்றம் சாட்டமுடியாது என்றும் நஜிப் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எனினும், இந்த பேரிடர் தொடர்பாக, ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு மலேசியா மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புக் குழுவினரை அனுமதிப்பது, கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் சுயேட்சை ஆணையத்திடம் ஒப்படைப்பது மற்றும் இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஆகிய மூன்று நிபந்தைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் விளக்கமளித்தார்.