அவ்விபத்தில் பலியான 31 பேருடைய குடும்ப உறுப்பினர்கள் மலேசிய விசாரணைக் குழு இந்த வழக்கில் எந்தவொரு அரசாங்க நடவடிக்கை திட்டங்களையும் தங்களிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி அனைத்துலக புலனாய்வாளர்கள் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதில் 298 பேர் கொல்லப்பட்டதாக கூறி நான்கு பேர் மீது கொலைக் குற்றச்சாட்டை சுமத்தினர்.
அவர்கள் ரஷ்ய நாட்டவர்களான இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி மற்றும் ஓலேக் புலாடோவ். ஒருவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்த லியோனிட் கார்சென்கோ ஆவார். அந்த அறிவிப்புக்கு பிறகு மலேசிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் கருத்துகள் ஜெஐடியின் கருத்துகளுடன் முரண்பாடாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
“இதுபோன்ற அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, மேலும் குடும்ப உறுப்பினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள்” என்று வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எம்எச்17 பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குழப்பத்திற்கு காரணமான உண்மைகளை குறிப்பாக குறிப்பிடவில்லை.