நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியால் நிதி ஒதுக்கப்பட்டு, சங்கோசி நதியின் மீது சுமார் 100 மீட்டர் நீளம் கொண்டதாக கர்கோட் பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தினை திறந்து வைத்த அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிமலேந்திர நிதி கூறுகையில், “இந்த பாலம் கட்டப்பட்டதன் மூலம் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் விவசாயம் ஆகியவை நல்ல முன்னேற்றத்தை எட்டும்” என்று கூறியுள்ளார்.