தமிழகம் முழுவதும் முதலில் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. பின்னர் ரசிகர்கள் வரவேற்பினால் 477 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
சென்னையில் முதல் வார வசூல் ரூ.4 கோடியை தாண்டியது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இரண்டு வாரத்தில் ரூ.11½ கோடி வசூலானது. பெரிய கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் கலைப்புலி தாணுவே இவ்விரு மொழிகளிலும் ‘அரிமா நம்பி’ படத்தை ரீமேக் செய்கிறார். இதில் நடிக்க பெரிய கதாநாயகர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.