எலுமிச்சையின் பயன்கள்:
* எலுமிச்சைச் சாற்றை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.
* முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்சனை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சத்து உதவுகிறது.
* பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலையை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.
* மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால், விரைவில் குணமடைவார்கள்.
* பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் சரியாகும். எலுமிச்சைச் சாற்றை தண்ணீர் கலக்காமல் குடிக்கக்கூடாது. குடித்தால் பல் பாதிப்படையும்.