Home அவசியம் படிக்க வேண்டியவை கர்ப்பால் சிங் கார் ஓட்டுநர் வழக்கு செப்டம்பர் 5 -ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

கர்ப்பால் சிங் கார் ஓட்டுநர் வழக்கு செப்டம்பர் 5 -ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

495
0
SHARE
Ad

KARPAL SINGHகம்பார், ஆகஸ்ட் 7 – கர்பால் சிங்கின் கார் ஓட்டுநர் சி.செல்வத்தின் வழக்கு வரும் செப்டம்பர் 5 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை நீதிபதி முகமட் இப்ராகிம் முகமட் குலாம் அறிவித்தார்.

இந்திய குடியுரிமை பெற்றவரான செல்வம் கர்ப்பால் சிங்கிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17 -ம் தேதி அதிகாலை, அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்குள்ளானதில், கர்ப்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர் மைக்கேல் ஆகியோர் மரணமடைந்தனர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து செல்வம் கடந்த ஜூலை 9ஆம் தேதி காவல் துறையினரால் கம்பார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் கவனக் குறைவாகவும், ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது சாலை போக்குவரத்து 1987 பிரிவு 41 -ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 வருடங்கள் சிறை தண்டனையும், 20,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.