கடந்த காலங்களில், அண்மையில் மறைந்த தமிழறிஞர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இந்த நிகழ்ச்சியில் வழங்கிய பல்வேறு உரைகள், அவரது ‘தொல்காப்பியம்’ குறித்த விளக்க உரைகள் பெருமளவில் வானொலி இரசிகர்களை ஈர்த்தன. அதன் வழி சீனி நைனா முகம்மதுவுக்கும் ஒரு வாசகர் வட்டம் உருவாகியது என்பதோடு, அவரது விளக்க உரைகள் மூலம் தொல்காப்பியம் குறித்த விழிப்புணர்வும் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டது.
பிரபல வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலத்தின் தயாரிப்பில் மலரும் இந்த நிகழ்ச்சியில் மறைந்த சீனி நைனா முகம்மது அவர்கள் குறித்த தகவல்களும், அவரது தமிழ்ப்பணி மற்றும் சிறப்பியல்கள் குறித்து மலேசியாவிலிருந்தும், மற்ற உலக நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களும் இடம் பெறும்.
செவிமெடுக்க மறவாதீர்கள்!
மின்னல் பண்பலையின் நிகழ்ச்சிகளை கீழ்காணும் இணைப்பின் வழியாகக் கேட்டு மகிழலாம்:
http://cdn.stream.my/player/playback.php?channel=rtm-ch015&quality=auto
http://www.liveonlineradio.net/malaysia/minnal-fm.htm