Home இந்தியா காமன்வெல்த் போட்டி: பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஜெயலலிதா பரிசளிப்பு!

காமன்வெல்த் போட்டி: பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஜெயலலிதா பரிசளிப்பு!

560
0
SHARE
Ad

glascow-commonwealthசென்னை, ஆகஸ்ட் 12 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா, ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

‘ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றால், 50 லட்சம் ரூபாய், வெள்ளிப் பதக்கத்திற்கு, 30 லட்சம் ரூபாய், வெண்கலப் பதக்கத்திற்கு, 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும்’ என, கடந்த 2011ல், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

shathishசமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பளு தூக்குதல் போட்டியில், 77 கிலோ உடல் எடைப்பிரிவில், தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார், தங்கப் பதக்கம் வென்றார்.

#TamilSchoolmychoice

glasgow2014‘ஸ்குவாஷ்’ மகளிர் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல், தங்கப் பதக்கம் வென்றனர். இவர்களுடன், டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல், அந்தோணி அமல்ராஜ் தங்கப் பதக்கம் வென்றனர்.

kashyap-parupalli23-600வெள்ளிப் பதக்கம் வென்ற ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த, ரூபிந்தர் பால் சிங், ஹஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகியோர், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர். அவர்களைப் பாராட்டி, முதல்வர் ஜெயலலிதா, ஏற்கனவே அறிவித்திருந்தபடி, பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.