Home இந்தியா உத்திரப் பிரதேசத்தில் வெள்ளம்: 28 பேர் பலி! 300 பேரை காணவில்லை!

உத்திரப் பிரதேசத்தில் வெள்ளம்: 28 பேர் பலி! 300 பேரை காணவில்லை!

710
0
SHARE
Ad

uttarakhandலக்னோ, ஆகஸ்ட் 18 – நேபாளத்தில் பெய்து வரும் பெரும் பேய்மழையால், ராப்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.

அங்குள்ள பலுபங், பைரவா உள்ளிட்ட அணைகள் நிரம்பி, நேபாள எல்லையில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் 7 மாவட்டங்களில் வெள்ளம் புகுந்தது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையால் வெள்ளம் புகுந்தது.

மேலும், இமாலய பகுதியில் உள்ள ஆறுகள் நிரம்பி ஓடுவதால், உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 300 பேரை காணவில்லை என பஹ்ரைச், கேரி மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

uthrakandam_005அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால், சுமார் 500 கிராமங்கள் பலத்த சேதமடைந்தன.

3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சரயு அணையில் நீர்மட்டம் உச்சத்தை எட்டியது. இதையடுத்து, அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

3அணைக்கு எந்த சேதம் ஏற்படாது என்றும், நேபாளத்தில் பெய்து வரும் மழையால் தான் பிரச்சனை எனவும், உத்தரப்பிரதேச நீர்ப்பாசனத்துறை செயலர் தீபக் சிங்கால் கூறினார்.

வெள்ள பாதிப்பு உள்ள இடங்களில் ஹெலிகாப்டர் மூலம், உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால், துத்வா, சுகேல்வா ஆகிய சரணாலயங்கள் பாதிக்கப்படலாம் என தெரிகிறது. இவற்றில் புலிகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

tsunamiஇதற்கிடையே, மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.