Home உலகம் அமெரிக்க பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய பிணையத் தொகை கேட்ட தீவிரவாதிகள்! 

அமெரிக்க பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய பிணையத் தொகை கேட்ட தீவிரவாதிகள்! 

367
0
SHARE
Ad

iraq (1)வாஷிங்டன், ஆகஸ்ட் 22 – அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் ஃபோலேவை கொலை செய்வதற்கு முன்பு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவரை விடுதலை செய்ய 132 மில்லியன் டாலர்களை பிணையத் தொகையாக கேட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஃபோலே பணியாற்றி வந்த குளோபல் போஸ்ட் இதழின் தலைவர் பிலிப் பல்போனி கூறியதாவது:- “ஃபோலேவை விடுவிக்க எங்கள் நிறுவனத்திடமும், அவரின் குடும்பத்தாரிடமும் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிணைத் தொகையாக தீவிரவாதிகள் கேட்டனர்.

இந்தத் தகவலை உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தோம்” என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும், தீவிரவாதிகள் பிணையத் தொகை கேட்டதை உறுதி செய்துள்ளது.

#TamilSchoolmychoice

iraqஐரோப்பிய நாடுகள் பிணையக் கைதிகளை விடுவிக்க, தீவிரவாதிகளுக்கு பிணையத் தொகை செலுத்துகின்றன. அதுபோல் அமெரிக்காவும் முயற்சி செய்து இருந்தால் ஜேம்ஸ் ஃபோலேவின் படுகொலை நடந்திருக்காது.

இனியாவது தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஏனைய மக்களை மீட்க ஒபாமா அரசு முயற்சி செய்யுமா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.