பாகிஸ்தானில் பலத்த மழை பெய்து வருவதால், பழமையான கட்டிடங்கள் உடைந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று லாகூரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள மசூதியில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பகல் நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இதில் மசூதியின் உள்ளே தொழுகை நடத்திக் கொண்டிருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மழையின் காரணமாக மசூதி இடிந்து விழுந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழமையான கட்டிடங்களில் வசிக்கும் மக்கள், தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.