இதன் மூலம் மிகப்பெரிய அளவில், மிக அதிக திரையரங்குகளில் வெளியீடு காணும் கோலிவுட் படம் எனும் பெருமை இப்படத்திற்கு கிடைக்கவுள்ளது.
அதிரடியும், திகிலும் கலந்துள்ள இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை இப்படம் திரை காணும் நிலையில், விஷால் பரத்வாஜின் ‘ஹெய்டர்’ படமும் வெளியாகிறது.
“இது பிரமாண்டமான படைப்பு. இப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறிக் கிடக்கிறது. திரையரங்குகளில் முன்பதிவு செய்ய கூட்டம் அலை மோதுகிறது.
‘பாங் பாங்’ படம் மொத்தம் 50 நாடுகளில் வெளியாகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.