இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அங்கு மதுபான விடுதி ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து வீசப்பட்ட இரண்டு கையெறி குண்டுகளில் ஒன்று வெடித்தது என்றும், மற்றொன்று செயலிழந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Comments