போர் முடிந்தவுடன் தடையை விலக்கிக் கொண்ட இலங்கை அரசு, தற்போது அந்த பகுதிகளுக்கு மீண்டும் வெளிநாட்டினர் செல்ல அரசு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட பகுதிகளுக்கு வெளிநாட்டினர் அவசியம் செல்ல வேண்டுமானால், வெளிநாட்டினர் பாதுகாப்பு துறையில் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அந்த பகுதிகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதிக்கு செல்லும் பாதையில் வவுனியா, ஓமந்தை ஆகிய இடங்களில் பலத்த இராணுவ சோதனை சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக வடபகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“எனினும் அவர்கள் அந்த பகுதிகளுக்கு அவசியம் செல்ல வேண்டுமானால் பாதுகாப்பு துறையிடம் முன்கூட்டியே விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.