Home நாடு ஊக்கமருந்து விவகாரம்: சோங் வெய் போட்டிகளில் பங்கேற்க தடை!

ஊக்கமருந்து விவகாரம்: சோங் வெய் போட்டிகளில் பங்கேற்க தடை!

505
0
SHARE
Ad

Lee Chong Weiபெட்டாலிங் ஜெயா, நவம்பர் 12 – மலேசியாவின் பிரபல பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் டெக்ஸாமெத்தாசோன் என்ற ஊக்கமருத்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளார் என உலகப் பூப்பந்து கூட்டமைப்பு (பிடபள்யூஎப்) தெரிவித்துள்ளது.

இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனைகளிலும், சோங் வெய் அம்மருந்து பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக அண்மையில் மலேசிய பூப்பந்து சங்கம் அறிவித்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பிடபள்யூஎப் முழு விசாரணை நடத்தும் வரை  லீ சோங் வெய் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ நோர்ஸா ஜக்காரியா கூறுகையில், “பிடபள்யூஎப் வெகு விரைவில் விசாரணை நடத்தும் தேதியை நிர்ணயிக்கும் என்று நம்புகின்றோம். 32 வயதாகும் சோங் வெய்க்கு இவ்வழக்கில் ஈராண்டு தண்டனைக்குப் பதிலாக இலகுவான தண்டனையைப் பெற வழியமைக்கும் வகையில் லண்டனிலுள்ள விளையாட்டுத்துறை வழக்கறிஞர் மைக்மோர்கனை மலேசிய பூப்பந்து சங்கம் அமர்த்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.