பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இராணுவப் பள்ளியை குறி வைத்து தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு நேற்று நடத்திய தாக்குதல், உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு, நேற்று அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்தோம். எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையை தற்போது இராணுவத்தினரும் உணருவர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.