Home உலகம் தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் எனது அரசு அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் – ராஜபக்சே!

தேர்தலில் தோல்வி ஏற்பட்டால் எனது அரசு அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் – ராஜபக்சே!

388
0
SHARE
Ad

rajabukshaகொழும்பு, டிசம்பர் 23 – அதிபர் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று மஹிந்த ராஜபக்‌சே உறுதியளித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து வெளியாகும் பினான்ஸியல் ரைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது மஹிந்த ராஜபக்‌சே இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். எனினும், ‘நான் தோல்வியடைப் போவதில்லை’ என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவர்.

மேலும் அவர் கூறியதாவது; “முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன’ என்றும் கூறியுள்ளார். ஆனால், ‘மீண்டும் நான் கூறுகின்றேன் நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்” என ராஜபக்‌சே தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இலங்கை அதிபர் தேர்தலை மேற்குலகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறியுள்ள ‘பினான்ஸியல் ரைம்ஸ் செய்தியாளர், புதிய அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்ற நம்பிக்கை மேற்குலகிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

வரும் 8-ஆம் தேதி நடக்கவுள்ள இலங்கை தேர்தலில் அதிபர் மஹிந்த ராஜபக்‌சேவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டால், ராஜபக்‌சே குடும்பத்தின் ஆதிக்கம் நிலவும் ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்திருக்க வன்முறைகள் உருவாகலாம் என்று உள்நாட்டு செய்தியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.