Home நாடு வெள்ளப் பேரிடர்: 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு

வெள்ளப் பேரிடர்: 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு

594
0
SHARE
Ad

Najib Malaysiaகோலாலம்பூர், டிசம்பர் 28 – வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேற்றும் இன்றும்  பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 50 கோடி ரிங்கிட் அளவிற்கு நிதி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் 8 மாநிலங்களில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு  இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் தனது விடுமுறையை ரத்து செய்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து அவசரமாக நாடு திரும்பியுள்ள பிரதமர் நஜிப், வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை நண்பகலில் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டு கிளந்தான் மாநிலத்தின் கோத்தாபாரு, பாசீர்மாஸ், தானாமேரா உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

An aerial view of a settlement submerged by floodwaters in the Pengkalan Chepa district of Kelantan, Malaysia, 28 December 2014. The  Malaysian government described this flood was the worst in 30 years, at least five people were killed and more than 118,000 people have sought shelter in the hundreds of evacuation centres opened by the government. Malaysian Prime Minister Najib Razak is to cut short a holiday in the United States to deal with major floods at home after coming under fire for spending time golfing with US President Barack Obama in Hawaii during the floods.
கிளந்தான், பெங்கலான் செப்பா வட்டாரத்தின் வெள்ள நிலைமையைக் காட்டும் ஆகாயப் படம் (படம்:EPA)

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது என அறிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.