இதற்கு சர்க்கரைப் பூசணி, சர்க்கரைப் பறங்கி என்று வேறு பெயர்களும் உண்டு. இது சமைத்து உண்ணும் போது சர்க்கரை சேர்த்து சமைத்தது போல இனிமை உடையதாக இருப்பதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
பரங்கிக்காயின் மேல்தோல் பச்சையாகவும் பழுத்த உடன் மஞ்சள் நிறத்தோடு கூடிய சிவப்பு நிறத்தை உடையதாகவும் உட்பகுதி மஞ்சள் நிறமான சதைப் பகுதி உள்ளதாகவும் இருக்கும். காய் மிகப் பெரிய உருண்டை வடிவமாகவும் இருக்கும்.
கொப்புளங்கள் விரைவில் ஆறும். பறங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கும் தன்மை உடையது. வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றவல்லது. குறிப்பாக வயிற்று புழுவை வெளியேற்ற வல்லது.
மேலும் பரங்கிக்காயின் விதைகளில் ஸ்டெரால் அமிலக் கொழுப்பு ஆகிய வேதிப் பொருள்களும் அடங்கியுள்ளது. இது புற்று நோய் கட்டிகளைத் தாக்க வல்லது.