Home கலை உலகம் 1000 படங்களை கடந்த இசைஞானி இளையராஜாவிற்கு மும்பையில் பாராட்டு விழா!

1000 படங்களை கடந்த இசைஞானி இளையராஜாவிற்கு மும்பையில் பாராட்டு விழா!

501
0
SHARE
Ad

ilaiyaraaja2மும்பை, ஜனவரி 13 – பாலா இயக்கத்தில் “ தாரை தப்பட்டை” படத்தின் மூலம் 1000-வது படத்தினை இசையமைத்து நிறைவு செய்துள்ள இசைஞானி இளையராஜாவிற்கு வருகிற 20-ஆம் தேதி மும்பையில் பாராட்டு விழா நடக்கவிருக்கிறது.

அமிதாப்பச்சன், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், ஜானகி, பி.சுசிலா உள்ளிட்ட பல கலைஞர்களும் பங்கேற்கவிருக்கின்றனர். தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் ராசய்யா என்ற பெயரில் பிறந்து 1976-ஆம் ஆண்டு “அன்னக்கிளி” படத்தின் மூலம் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.

இதுவரை 5000-க்கும் மேற்பட்ட பாடலுக்கு இசையமைத்துள்ளார். தன்னுடைய 1000-வது படத்தினை முடித்திருப்பதால் மும்பை திரையுலம் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பால்கி பாராட்டுவிழாவிற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

#TamilSchoolmychoice

“ பால்கி இயக்கத்தில், தனுஷ், அமிதாப் பச்சன் நடித்து வெளிவரவிருக்கும் “ஷமிதாப்” படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி மும்பையில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் 1000 படத்திற்கு மேல் இசையமைத்து வாழ்நாள் சாதனை படைத்த இசைமேதை இளையராஜாவிற்கு பாராட்டுவிழா நடத்தவுள்ளோம்.

இவ்விழாவிற்கு இளையராஜாவுடன் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளையராஜாவும் விழாவில் பாடவிருக்கிறார்”என்று கூறியுள்ளார் பால்கி. தேசிய கீதத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அமிதாப்பச்சன் குரலில், பால்கியின் இயக்கத்தில் இந்த ஆல்பம் உருவாகிவிருக்கிறது. ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியிட இருப்பதாகவும் பால்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.