Home வாழ் நலம் இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்!

இதய நோய்க்கு மருந்தாகும் புடலங்காய்!

838
0
SHARE
Ad

gourd_-_snake_gourd-web13பிப்ரவரி 13 – புடலங்காய் நாம் சாதாரணமாக கூட்டாக சமைத்து உண்ண பயன்படுத்துவோம். மிக்க சுவையான அந்த காயில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்ததில்லை.

கூட்டுக்கு பயன்படுத்தும் புடலங்காயில் பன்றிப்புடல், கொம்புப்புடல், பேய்ப்புடல் என வேறு வகைப் புடலங்காய்களும் உண்டு. புடலங்காய் மேற்புறத்தில் மென்மையான  தோலை உடையதாகும். 150 செ.மீ அளவுக்கு இது நீளமாக வளரக்கூடியது ஆகும்.

உள்ளே நீரோடும் சற்று பிசுபிசுப்பும் கூடிய சதைப்பற்று உடையதாக இருக்கும். இது சற்று கசப்பு சுவையுடைதாக இருப்பினும். சமைக்கும் போது இதன் கசப்புத் தன்மை போய் விடுகின்றது.

#TamilSchoolmychoice

புடலங்காயை இளசாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு  அல்லாமல் செரிமானம் ஆவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் புடலங்காயை கறியாக சமைத்து உண்ணும் போது அதன் விதைகளை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும். விதைகள் வயிற்றுக்கு துன்பம் தருவதாக இருக்கும். முற்றிய புடலங்காயோ அதன் விதைகளோ வயிற்றுப் போக்கை உண்டாக்கக் கூடியவை.

100கிராம் புடலங்காயில் 94 சதவிகிதம் உணவாகும் பகுதி ஆகும். 92.9 கிராம் நீர்ச்சத்து உடையது. மாரடைப்பைத் தடுக்க வல்லது. கருத்தடைக்கு உதவுவது, பால்வினை நோயான எச்.ஐவிக்கு எதிரானது.

புடலங்காயில் பல மருத்துவ வேதிப்பொருட்கள் மிகுந்துள்ளன. புடலங்காய் காய்ச்சலை போக்க கூடியது.  எனவே அடிக்கடி விட்டுவிட்டு காய்ச்சல் தொடரும் போது அடிக்கடி புடலங்காயை இளசாக வாங்கி கறியாக சமைத்து சாப்பிடுவதால்  காய்ச்சல் மறைந்து போகும்.

snake-gourdபுடலங்காய் இதயத்துக்கு பலமும் நல்ல செயல்பாட்டையும் தரக்கூடியது. அதிக உடலுழைப்பு, பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றால் இதயத்துடிப்பும், பெருமூச்சும் ஏற்பட்டு இதயம் பலவீனமடைவது இயற்கையாகும்.

இந்நிலைக்கு ஆளானோர் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதோடு அன்றாடம் காலையில் எழுந்து புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து,

சாறாகப் பிழிந்து வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் இரண்டு  வேளைகள் சாப்பிடுவதால் இதயத்துடிப்பு சமநிலை பெருவதோடு இதயமும் பலம்பெறும். இதய நோயாளிகள் 48 நாட்கள் சாப்பிடுவதால் நலம் பெறுவர்.

புடலம் வேரை 5முதல் 10 கிராம் வரை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி தீநீராக்கி குடிக்க பித்தத்தைப் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகளை வெளியேற்றும்.