கோலாலம்பூர், பிப்ரவரி 14 – நேற்று கூடிய 2009ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினரின் கூட்டம் அதிகாரபூர்வமானதுதான் என்றும் தங்களின் கூட்டம் சட்டவிரோதமானது அல்ல என்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய செயலவையினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தனர்.
“பதவி விலகல் மற்றும் மரணத்தின் காரணங்களினால் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்த்து அவரவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே செயல்படுவார்கள் எனவும் சொல்லப் பட்டிருக்கிறது. அதன் படி சக்திவேல் அந்த காலகட்டங்களில் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காரணத்தின் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு மத்திய செயலவையின் அவசர கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த கூட்டத்தைக் கூட்டினார். ஆக இந்த கூட்டம் சட்டத்திற்கு உட்பட்டதே என்பதனை மிகத் தெளிவாக விளக்கிக் கொள்கிறோம்” என்றும் அந்த மத்திய செயலவையினர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.