லிபியாவில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தை சேர்ந்த எண்ணற்ற காப்டிக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து மாயமாகி வந்தனர்.
அவர்களின் கடத்தலுக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல்வேறு இயக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் இணைய பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு காணொளி வெளியானது.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் எகிப்து இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள், பயிற்சி நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை இலக்காக வைத்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்திருப்பதாக எகிப்து இராணுவம் தெரிவித்துள்ளது.