கடந்த 2011-ஆம் ஆண்டு உலக கோப்பையில் கடைசி 4 ஆட்டங்களிலும் வென்றிருந்த டோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக 10-வது வெற்றியுடன் சாதனை படைத்தது. இப்போட்டி மலேசிய நேரப்படி காலை 11.30 மணிக்கு துவக்குகிறது.
எல்லா வகையிலும் வலுவாக அமைந்துள்ள இந்திய அணி, கால் இறுதியில் வங்கதேசத்தையும் வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடரும் உறுதியுடன் களமிறங்குகிறது.
அதே சமயம், முதல் முறையாக உலக கோப்பை கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ள வங்கதேச அணியும், இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் உத்வேகத்துடன் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக களமிறங்காத கேப்டன் மோர்டசா, கால் இறுதிக்கு தலைமையேற்க தயாராகி உள்ளார். முஷ்பிகுர் ரகிம், ஷாகிப் அல் ஹசன், இம்ருல் கேயஸ் ஆகியோரும் கணிசமாக ரன் குவித்தால் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
மெல்போர்ன் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால், முதலில் பேட் செய்யும் அணி 300+ ரன் எடுத்தால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். இரு அணிகளுமே அரை இறுதிக்கு முன்னேற முயர்ச்சிப்பதால், ஆட்டம் விருவிருப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.