Home கலை உலகம் நடிகை ஷில்பா ஷெட்டி மீது கொல்கத்தா போலீசார் மோசடி வழக்கு!

நடிகை ஷில்பா ஷெட்டி மீது கொல்கத்தா போலீசார் மோசடி வழக்கு!

604
0
SHARE
Ad

shilpa shattyகொல்கத்தா, மார்ச் 23 – பண மோசடி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. பத்திரிகை நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளில் 10 தவணையாக இந்த பணம் திருப்பி தரப்படும் என்றும், அவரது நிறுவனத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பங்குகள் எம்.கே. நிறுவனத்திடம் வழங்கப்படும் என்றும் அப்போது உறுதி கூறப்பட்டது.

ஆனால் அவர்கள் கூறியபடி பணம் திருப்பி வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து எம்.கே. பத்திரிகை நிறுவனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி எம்.கே. நிறுவனம் சார்பில் தேபஷிஸ் குகா என்பவர் கொல்கத்தா சாரணி போலீசில் புகார் செய்தார். இதை பெற்றுக்கொண்ட போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ரிபு சுதன் குந்த்ரா ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.