Home கலை உலகம் ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

492
0
SHARE
Ad

மும்பை : ஆபாசக் காணொலி படத் தயாரிப்பு, விநியோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவுக்கு 2 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) ஜாமீன் வழங்கப்பட்டது.

ராஜ் குந்த்ரா, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவராவார். கடந்த ஜூலை மாதத்தில் அவர் ஆபாசக் காணொலி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைச் சமர்ப்பித்த ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மும்பை நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கியது.