Home இந்தியா ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

478
0
SHARE
Ad

vijay-run-out-samsonபுனே, ஏப்ரல் 11 – இந்தியன் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் – ராஜஸ்தான் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்  ஜார்ஜ் பெய்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

பின்னர் 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.