Home கலை உலகம் 20 தமிழர்கள் சுடப்பட்ட சம்பவம் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் படமாக உருவாகிறது!

20 தமிழர்கள் சுடப்பட்ட சம்பவம் ராஜேஷ்குமாரின் திரைக்கதையில் படமாக உருவாகிறது!

424
0
SHARE
Ad

-andhra-encounter989பெங்களூரு, ஏப்ரல் 29 – ஆந்திராவில் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ’தூக்குமர பூக்கள்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை ‘ஜெய விஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன்’ – ‘ஸ்காட் மூவி மேக்கர்ஸ்’ இணைந்து தயாரிக்கிறது.

முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர். திரைக்கதை, வசனத்தை ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின்.

செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தயாரிப்பு மேற்பார்வை – ஜோதிமணி, ராஜசேகர், ராஜ்குமார். சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. விரைவில் நடிகர்கள் பற்றி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.