4 ராஜவீதிகளிலும் 4 தலைமை அதிகாரிகளின் ஆணையில் 200 போலீஸ் மற்றும் 100 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர் நிற்கும் இடமான மேலவீதியில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் ராஜவீதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் இயக்க போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தேரோட்டம் நடக்கும் 4 ராஜ வீதிகளில் மாவட்ட ஆட்சியாளர் சுப்பையன் ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் நிருபர்களிடம் கூறியதாவது: “உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை தந்துள்ளனர்”.
“பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பின் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறுவதால் தஞ்சை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்”.