Home இந்தியா ஜெயலலிதா விடுதலைக்கு நான் வாழ்த்து கூறவே இல்லை – வைகோ!

ஜெயலலிதா விடுதலைக்கு நான் வாழ்த்து கூறவே இல்லை – வைகோ!

469
0
SHARE
Ad

JAYAசென்னை, மே 13 – சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதாவுக்கு தான் வாழ்த்து கூறவில்லை என்றும், உலக செவிலியர்கள் நாளை முன்னிட்டு, செவிலியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்ததை, தவறாகப் புரிந்து கொண்டனர் என வைகோ கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11-ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது” என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 11-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. இந்தத் தீர்ப்பு முந்தய தீர்ப்பை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது.”

#TamilSchoolmychoice

“இந்த தீர்ப்பின் முழு விவரத்தையும் அறிந்த பின்னரே கருத்துத் தெரிவிக்க முடிவு செய்தேன். உலக செவிலியர்கள் நாளை முன்னிட்டு, செவிலியர்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்ததை பத்திரிகையாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்”.

“நீதிபதி குமாரசாமி தந்த தீர்ப்பில், நீதிபதி சொத்துக் கணக்கிட்டதில் பெரும் தவறு நேர்ந்து இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களை எல்லாம் அவரது வருமானமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி,”

“அந்த கூட்டுத் தொகை 24 கோடியே 14 இலட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் என்றும், எனவே வருவாய்க்கும் சொத்துகளுக்கும் இடையிலான வேறுபாடு 2.82 கோடிதான் என்றும் நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி உள்ளார்”.

“ஆனால் ஜெயலலிதாவின் வருமானத்தைவிட சொத்து மதிப்பு 76.75 சதவீதம் என்பதால், நீதிபதி இதுகுறித்து கணக்கிட்டது மிகப்பெரிய பிழை என்றும், தீர்ப்பின் அடிப்படையே தகர்ந்துவிட்டது என்றும், உறுதியாக தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா சொல்லியுள்ளார்”.

“உண்மை வெளிச்சத்துக்கு வரவும், நீதி நிலைக்கவும் கர்நாடக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஒன்றுதான் சரியான நடவடிக்கையாக அமையும். பேரறிஞர் அண்ணா தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11-ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது” என்று கூறியுள்ளார் வைகோ.