வாஷிங்டன், மே 16 – கிழக்கு சிரியாவில் துணிச்சலான அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் மூத்த தலைவர் ஒருவரை சுட்டுக் கொன்றதோடு அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.
இதனை வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது.
உம்ம் சாயாஃப் தற்போது ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ சிறைச்சாலை ஒன்றில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலின் காரணமாக, அபு சாயாஃப் தம்பதியரால் ஓர் அடிமையாக பிணை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் பெண்மணி ஒருவரும் அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் கூடிய விரைவில் தனது குடும்பத்தாரோடு மீண்டும் இணைவார் என்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.