Home நாடு பினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை!

பினாங்கில் ரோஹின்யா ஆடவர் சுத்தியலால் அடித்துக் கொலை!

400
0
SHARE
Ad

Crime-Pixபுக்கிட் மெர்த்தாஜாம், ஜூன் 1 – பெர்மாத்தாங் ராவா பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 26 வயது ரோஹின்யா ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பைரஸ் அகமட் என்ற அந்த ஆடவரின் சடலத்தை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவரது தலையில் சுத்தியலால் தாக்கியதற்கான மூன்று காயங்கள் இருந்துள்ளன.

பைரஸ், வீடு கட்டுமானம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

காவல்துறை தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இந்த கொலை சம்பவத்தைப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றது.