2022 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கு முன்பாக கத்தார் நாட்டின் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில் (Promising Little, Delivering Less: Qatar and Migrant Abuse ahead of the 2022 Football World Cup) இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடக்கவுள்ள பிபா கால்பந்து தொடர் போட்டிக்கான கட்டமைப்பு வசதிகளைச் செய்வதற்கான கட்டிட தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் அதிகளவு சென்றிருக்கிறார்கள்.
“என் பாஸ்போர்ட் ஸ்பான்சர்களின் கையிலேயே இருக்குமென்பதால், வேறு எங்கும் சென்று வேலை தேடவும் முடியாமல் போய்விட்டது.” என்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1000 இந்திய தொழிலாளர்கள் கத்தாரில் மரணமடைந்துள்ளனர். இந்தியா மட்டுமின்றி நேபாளத்திலிருந்து சென்ற 162 தொழிலாளர்களும் கடந்த ஆண்டு மரணம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.