இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சரக்குப் போக்குவரத்துச் சேவைக்காகப் பிராங்ஃபர்ட்டிலிருந்து கோலாலம்பூருக்கு வாரத்திற்கு 5 விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இது பற்றி அந்நிறுவனம் வட்டார இயக்குனர் ஃபிராங்க் பெல்னர் கூறுகையில், “மாஸ் நிறுவனம் பிராங்ஃபர்ட்டிற்கான சரக்குப் பரிமாற்ற சேவையை நிறுத்தியது, அந்நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவாகும். எங்களைப் பொருத்தவரையில் மலேசிய வர்த்தகத்தை நாங்கள் அதிகம் விரும்புகின்றோம்.”
“ஒட்டுமொத்த ஆசியாவில் மலேசியாவின் வர்த்தகம் எங்களுக்கு நிறைவை அளிக்கிறது. வாரத்திற்கு 70 முதல் 100 டன்களில் பயணிகளின் சரக்குகளை நாங்கள் இடமாற்றம் செய்கின்றோம். இதன் காரணமாக வர்த்தகம் அதிகரித்தது மட்டுமல்லாமல் பயணிகளின் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.